Thursday 15 October 2015

அடைக்கலமாய் வந்ததேனோ


          




அத்தனை பெரிய வீட்டில் எனக்கு பிடித்த
இடம் இந்த ஜன்னல் தான்.

கட்டில் மெத்தை அருகில் இருந்தாலும்
நான் துயில் கொள்ள விரும்பும்
இடம் இந்த ஜன்னல் தான்.

செண்பக பூவின் வாசனையில்
என்னை மறந்துறங்கும்
இடம் இந்த ஜன்னல் தான்.

எத்தனையோ இரவுகள்
தனிமையில் புலம்பி கழிக்கும்
இடம் இந்த ஜன்னல் தான்.

மழைச் சாராலில் என் கை நனைத்து நின்ற
இடம் இந்த ஜன்னல் தான்.

என் தனிமை அறிந்தே எனக்கு துணையாக
வந்த இளம் சிட்டுக்களே,
உங்களுக்கும் பிடித்த இடம்
இந்த ஜன்னல் தானோ?

வந்த ரெண்டொரு நாளில் தனக்கென
ஒரு கூட்டைக் கட்டி நீங்கள் செய்யும்
குறும்புகளை நான் ரசித்த வண்ணமாய்
உங்கள் மீது பொறாமை கொள்ளும்
இடமும் இந்த ஜன்னல் தான்.

ஒற்றைக் கம்பியில் கட்டிய கூட்டினை
களைந்தெரியத் துடிக்கும் கரங்களுக்கு
அரணாய் காத்திருப்பேன்
இந்த ஜன்னலிடமே.


No comments:

Post a Comment