Monday 31 August 2015

கொச்சின் அனுபவம் - பாகம் 4



நான் கவனிக்க வந்த பேஷண்ட்க்கு சொந்த ஊர் கனடா. அங்க ஏதோ ஒரு கம்பெனியில் கம்யூட்டரில் வேலைப் பார்த்துக்கிட்டு இருந்திருக்காங்க. அவரோடக் கணவருக்கும் கனடாவில் தான் வேலை நல்ல வருமானம். பொதுவா உட்கார்ந்தே வேலை செய்கிறவங்களுக்கு முதுகு வலி வரும். அதிலும் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம். குழந்தைப் பிறந்ததும் அவுங்க உடம்பு ரொம்ப வீக்காயிடுது. ஆனாலும் குடும்பத்திற்காக ரெஸ்டே இல்லாமல் வேலை செய்யும் போது அது உடம்பை படுத்தி எடுக்கும்.


முதுகு வலினுச் சொல்லி ட்ரீட்மெண்ட் எடுத்திருக்காங்க. அதில் எதுக்காகவோ கரண்ட் ஷாக் கொடுத்திருக்காங்க.அப்படி கொடுத்ததில் அவுங்க கை கால் நரம்பெல்லாம் இழுத்து நடக்க முடியாம படுத்த படுக்கையா ஆயிட்டாங்க.


படுத்த படுக்கையா ஆனதும் அதுக்கு வேற ட்ரீட்மெண்ட் எடுத்து சரி ஆயிட்டாங்க. ஆனா அவுங்களுக்குள் ஏற்பட்ட பயத்தை யாராலும் போக்க முடியல. அந்த நேரத்தில தான் அமிர்தபுரி அம்மா சுதா மணி அவர்கள் பிரசங்கத்திற்காக கனடா வந்திருக்காங்க. அவுங்க பிரசங்கத்தைக் கேட்டு அங்கிருந்து அமிர்தபுரி வந்துட்டாங்க.


அமிர்தபுரி வந்தாலும் அவுங்க பயம் மட்டும் போகவே இல்லை. எழுந்து நடமாட முடியாமல் படுத்த படுக்கையிலே இருந்தாங்க.


முதல் நாள் நான் பார்க்கும் போது எனக்கே கொஞ்சம் பயமா தான் இருந்தது. எண்ணெய் இல்லாமல் தலை முடி முகம் தெரியாத அளவுக்கு தாறுமாறா இருந்தது. கை கால் இரண்டும் நல்லா வீங்கி போய் இருந்தது..


கட்டிலைச் சுற்றி அமிர்தபுரி அம்மா படம் தான். தலையணிக்கு கீழ் பக்கத்தில் வேறு எப்ப பார்த்தாலும் யாருக்கும் தெரியாமல் அந்த அம்மா போட்டோவை முத்தம் கொடுத்துக் கொண்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு அம்மா மேல் நம்பிக்கை.


என்னைப் பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி நீ என்ன சோப்பு போட்டு குளிப்ப, என்ன பவுடர் போடுவனு தான். அதுக்கு நான் பதில் சொன்னதும் அதெல்லாம் போட்டா என் உடம்பு தாங்காது. நான் ரொம்ப சீரியஸ் கண்டீசன்ல இருக்கேன். எனக்காக அதெல்லாம் போடாதே ப்ளிஸ்ன்னுட்டாங்க....நானும் சரிமா . நீங்க சீக்கிரமா எழுந்து நடமாடுவீங்க. பயப்படாதிங்கனு சொன்னேன். பார்க்க பாவமா தான் இருந்தது.


ஆயிரக்கணக்கில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிடாமல் மூலையில் கிடக்கு. எல்லாம் சாப்பிட பயம். முதல் வேலையா எல்லாத்தையும் பார்சல் பண்ணி தெரியாமல் ஒளிச்சி வைச்சிட்டேன்.


எப்படியாவது இவுங்க வழிக்கே போய் இவுகள சரி பண்ணனும். அதான் என் வேலை.


காலையில் கிச்சனில் போய் சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட வைச்சேன். பதினோரு மணிக்கி அவுங்க கணவர்ட கொஞ்சம் காய்கறி வாங்கி தரச் சொன்னேன்.

"எதுக்கு காய்கறி எல்லாம் இங்க தான் சாப்பாடு தருவாங்களே".


அதுவும் இருக்கட்டும். இதுவும் வேணும்னு சொல்லி வாங்கி வரச் சொன்னேன்.


கேரட்,பீன்ஸ், வெங்காயம், மிளகு சீரகம் போட்டு சூப் வைத்து குடிக்க கொடுத்தேன். ரொம்ப நல்லா இருக்கு தினமும் வைச்சி தரச் சொல்லி சாப்பிட்டாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எழுப்பி உட்கார வைச்சாச்சி.பயத்தைப் போக்க நானே எனக்கு தெரிந்த கதைகளை கற்பனையாச் சொல்லி கொஞ்சம் கொஞ்சமா வீல்சேரில் வெளியில கூட்டுட்டு போவேன்.


அம்மா கோயில், காளிக் கோயில் பஜனை ஹால் எல்லாப் பக்கமும் கூட்டிட்டுப் போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வருவோம். 

"அங்க என்ன கூட்டமா இருக்கு?"

"தெரியலையே ...ம்மா, இருங்க போய் பார்த்துட்டு வாரேன்"

அங்க போய்  ஒருத்தர் கிட்ட  கேட்டேன்.

"என்ன...எதுக்கு கூட்டமா இருக்காங்க?"


"இவ்விடப் பாம்பு போய்... "

"என்னது பாம்பா....எங்க....?"

"அவ்விட "

எதோ பொந்துக்குள் போயிட்டு அது மட்டும் தான் புரிந்தது.

இங்க வந்தா  அந்தம்மா கேக்குறாங்க, 

"என்ன கூட்டம்?"

"ஒன்னும்மில்ல...பாம்பு வந்ததாம்"

 கேட்கனுமா....அய்...ய...ய்...ஒ பாம்பா. என்ன மறுபடியும் பயமா.... 

"முதல்ல நீ கதவைச் சாத்து .ஜன்னலை நல்லா மூடு. பாத் ரூம் ஒட்டையை அடை"


"ஐய்....யோ...அம்மா. அது அங்க தானே வந்தது. அதுக்கு ஏன் இவ்வளவு பயம்".


"அங்க வந்த பாம்பு இங்க வர எவ்வளவு நேரம் ஆகும். உனக்கு தெரியாது. முதல்ல ரூம்ம மாத்தனும் போய் வேற ரூம் புக் பண்ணிட்டுவா"

"சரி..சரி...."


ஆசிரமத்தில் தங்கனும்னா முதலில் ரூம் புக் பண்ணனும். வாடகை ஒரு நாளைக்கு 250/- ருபாயும், சாப்பாட்டுக்கு மாதம் ஒரு ஆளுக்கு 2000/-ரூபாயும் கட்டனும். இவுங்க இருக்கிற ரூம்ல இரண்டு பேர் தங்கலாம். ரூம் போய் கேட்டா எல்லாம் அஞ்சாவது மாடி ஆறாவது மாடியில தான் ரூம் இருக்கு. அங்க போனா லிப்ட் இருக்கு ஆனா இந்த அம்மா மறுபடியும் வெளியில வர மாட்டாங்களே. சரி ஒரு பொய் சொன்னா தப்பில்லைன்னுட்டு  ரூம் ஒன்னும் காலியா இல்லைமான்னு  சொல்லிட்டேன்...

-  தொடரும் (அடுத்த பதிவில்  முடியும்)

கொச்சின் அனுபவம் - பாகம் 1
கொச்சின் அனுபவம் - பாகம் 2
கொச்சின் அனுபவம் - பாகம் 3

No comments:

Post a Comment