Sunday 23 August 2015

கொச்சின் அனுபவம் - பாகம் 1



சென்னை To கொச்சின்
........................................................


ட்ரீங் ........ட்ரீங் .......ட்ரீங் .......

"ஹாலோ......யாருங்க?. மேடம்...?"

"ஒரு பேஷண்ட் கேர் வந்திருக்கு, நீங்க பாக்க முடியுமா மேடம்?"

"எந்த..ஊர். மா?"

"பேஷண்ட்க்கு ஊர் "கொச்சின்" மேடம்"

"ஓகே மா. எப்ப கிளம்பனும்மா?"

"நாளைக்கு காலையில் 7.30க்கெல்லாம் அண்ணாநகர் வந்துட்டிங்கன்னா கொச்சின் அட்ரஸ்ச வாங்கிட்டு கிளம்பிடலாம்"

"ஓகே. மா....ஆனா பகல்ல ட்ரவல் பண்ணுறத விட நைட்னா நல்லா இருக்குமே மா"

"அப்படினா. ..நீங்க நைட்டே கிளம்புங்க மேடம்"

"ஓகே மா" என்னோட  கொச்சின் பயணம்  இப்படி  தான்  ஆரம்பிச்சது.

"கொச்சின்" எனக்கு பதினைந்து பதினாறு வயது இருக்கும் போது போனது. பெரிய ஐயா கார் வாங்கினப் புதுசுல கொல்லம்,கொச்சின்,எர்ணாகுளம், திருவனந்தபுரம் எல்லாம் கூட்டிட்டுப் போனாங்க.

கிட்டத்தட்ட முப்பது முப்பத்தி ஐஞ்சி வருஷம் இருக்கும். அதற்கு பிறகு இப்ப தான் கொச்சின் போகுற வாய்ப்பு கிடைச்சிருக்கு.

மூட்ட முடிச்சியக் கட்டிக்கிட்டுப் புறப்பட்டாச்சி.

கோயம்பேடு போய் கொச்சின் பஸ்ஸத் தேடுனா இப்ப பஸ் இல்லையாம். அப்ப எப்படி கொச்சின் போகிறதுனுக் கேட்டா கோயமுத்தூர் போனா அங்க அடிக்கடி. பஸ் இருக்குனுச் சொல்லிட்டாங்க.

சரினு..கோயமுத்தூர் பஸ் ஏறி கோயமுத்தூர் போய்ட்டேன். அங்க போய்

"அண்ணே....இங்க கொச்சின் பஸ் எங்க வரும்?"

"கொச்சின் பஸ் இங்க வராதுமா. நீங்க "5 நம்பர்" பஸ்ல ஏறி "உக்கடம் " போனிங்கனா அங்க நிறைய பஸ் உண்டு"

"தேங்யூ ...அண்ணே"

5ம் நம்பர் பஸ்ல உக்கடம் போயாச்சி.. இங்க கொச்சின் பஸ் எங்க நிற்குதுனு தெரியலையே.......

பக்கத்தில் நின்றவர்ட போய் "சார் இங்க கொச்சின் பஸ் எங்க வரும்"

"இவ்விட கொச்சின் பஸ் இல்லா...... பாலக்காடு. பஸ் உண்டு. அவிடப் போய் கொச்சின் உண்டு....".

"ஆஹா. .....இது ........மலையாளம் .? இங்கேயே..... மலையாள...மா?"

இது சரிவராது...... ஆட்டோ டிரைவர்ட போய் "இங்க கொச்சின் போகிறப் பஸ் எங்க நிற்கும்?"

"அதுக்கு காந்திபுரம் பஸ்டாண்டுலா போகனும்"

"இல்ல..இங்க தான் வரும்னுச் சொன்னாங்க........"

"இங்க பாலக்காடு ,திருச்சூர் பஸ் வரும். அங்கப் போய் கொச்சின் போலாமே".

இங்கேயே. மலையாளம் பறையுதாங்க. எனக்கு சுத்தமான மலையாளம் தெரியாது. இதுல பாலக்காடுப் போய் பாஷைத் தெரியாம விழிக்கவா ....வேண்டாம்........ இந்த விபரீதப் பரீட்சை .....

"கொச்சினுக்கு த்ருவா இங்கிருந்து பஸ் கிடையாதா அண்ணா"

"காந்திபுரம் போன அடிக்கடி பஸ் உண்டுமா"

"தயவுசெய்து காந்திபுரத்தில கொஞ்சம் விட்டுடுங்க ...ண்ணே..."

ஆட்டோக்காரர் பத்திரமா காந்திபுரம் பஸ்டாண்டுல விட்டுவிட்டார்.

அட .....இங்கே இருந்து தான்னே உக்கடம் வந்தேன். இது தான் காந்திபுரம் பஸ்டாண்டா.

"இங்க அடிக்கடி கொச்சினுக்கு பஸ் உண்டுமா"

"தேங்யூ.....ண்ணே......"

இனியார்டையும் கேட்கக் கூடாது. நேரா புக்கிங் ஆபிஸ்ல போய் "சார் கொச்சின் பஸ் எப்ப வரும்?".

"இன்னும் கொஞ்ச நேரத்தில வரும்...மா"

"தேங்யூ சார்"

"கோயமுத்தூர்"என் வாழ்க்கையில என்னைக்குமே மறக்க முடியாத ஊர். அப்படியே பழைய நினைவுகளை நினைத்துப் பார்துக்கிட்டு இருக்கும் போதே பஸ் வந்துட்டு.

திருச்சூர் ,பாலக்காடு ,எர்ணாகுளம் .....

"இது கொச்சின் போகுமா....?"

"கொச்சினுக்கு த்ருவா பஸ் இல்லா... எர்ணாகுளம் போய் அங்கிருந்து கொச்சின் பக்கம் தான்".

சரி... இத விட்டா வேற பஸ் இருக்கோ இல்லையோ. தெரியலை. பேசும எர்ணாகுளம் போய் பாத்துக் கொள்ளலாம்.

என்ற குருவாயூர் ...அப்பா .....நீயே ...துணை.

முதல்ல கொச்சின் போனதும் மலையாளம் அறியனும்.

அப்படி இப்படினு எர்ணாகுளம் வந்துட்டேன்.

வயிற்றில் பூச்சிக்கடிக்க ஆரம்பிச்சிட்டு . பின்ன காலையிலெ ரெண்டு இட்லியும் ,ஒரு வடையும் சாப்பிட்டது. அப்ப பசிக்காது.

முதல் வேலையா ரெண்டு ஆப்பம் கடலைக்கறியோடு சாப்பிட்டுட்டேன்.

சாப்பாடு முடிந்ததும் மீண்டும் கொச்சின் நோக்கி பயணம்.

அங்க நின்ற பஸ் நடத்துனர்ட கொஞ்சம் தைரியத்த வர வச்சிக்கிட்டு கைல இருந்த அட்ரஸ்ச காட்டிக் கேட்டேன்.

பாவம்.....அவருக்கு ஒன்று புரியவில்லை. ஏன்னா ......அட்ரஸ் தமிழ்லயும், ஆங்கிலத்திலும் இருக்கு....

பழையபடி புக்கிங் ஆபிஸ்லயே கேட்டேன். அவரும் கொஞ்ச நேரம் யோசித்துப் பாத்துட்டு இந்த அட்ரஸ் கொச்சின் இல்ல "கொல்லம்"

ஆஹா....கொல்லமா?.

அட்ரஸ்; காயன் குளம், அமிர்தபுரி. மாதா அமிர்தானந்தமாயி ஆசிரமம்.

அட்ரஸ் கொடுத்தவர் "கொச்சின்ல இருந்து காயன்குளம் போனா ஆட்டோக்காரர்டச் சொன்னா போதும் கொண்டு விட்டுடுவார்." ன்னு  தான  சொன்னார்..

மொழியும் தெரியாம ,சரியான ஊரும் தெரியாம வந்தா இப்படி தான். எதோ நான் கொஞ்சம் தைரியசாலியா இருக்கப் போய் பரவாயில்லை?


- தொடரும்



******** பூங்கோதை*********

1 comment:

  1. aiyo! mozi theriyaatha uril theriyaamal mukavari eppadi kandu pidithu ponirkalo.

    intha pathivai vasithathum enakkum oru siru anupavam ninaivukku vanthu ponathu.

    nallaa aarampam.
    thodarungal thodarkiren.

    ReplyDelete