Monday 31 August 2015

கொச்சின் அனுபவம் - பாகம் 5




இரண்டு நாளா தூங்கலை. எங்க பாம்பு வந்திருமோனு பயம். விடிஞ்சா காலையில சித்திரை மாதப் பிறப்பு. கோயில்ல பஜனையும் பாட்டுமா அமர்களம் பண்ணினாங்க.

"அம்மா ....இன்னைக்கு மாதப் பிறப்பு . வாங்க கோயிலுக்கு போவோம்"

"கோயிலுக்கா... நான் வரலை"

எங்க வெளியில போனா பாம்பு வந்திருமோனு பயம்.


மறு நாள் காலை விஷு வருடமாம். பக்கத்து ஊரில் இருந்து நிறையப் பேர் வந்திருந்தாங்க. அவுங்களுக்கு எல்லாம் கொடுக்க வண்டி வண்டியா நர்சரியில் இருந்து மரக் கன்றுகள் வந்திருந்தது.


நான் அப்ப தான் அடுப்பில் சூப் வைச்சிக்கிட்டு இருந்தேன். ஜன்னல் பக்கம் ஒரே கசமுசானு சின்ன சத்தம்.

என்னனுக் கேட்டதுக்கு பாம்பு....

மறுபடியும் முதல்ல இருந்தா....

"என்ன சத்தமாம்?"

"ஒன்னும் இல்லை. இப்ப வர்ரே"னு கதவை சாத்திட்டு பாம்பு இருக்கும் இடத்துக்கு போனேன்.

"எங்க பாம்பு இருக்கு?

"இதுக்குள்ள தான்"

கோயில்ல பஜனை நடப்ப தால் கொஞ்ச பேர் தான் நின்னுக்கிட்டு இருந்தாங்க. நானும் அவுங்களோடு சேர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

முட்டையும், பாலும் வைச்சா பாம்பு வெளியில வந்துடும். தவளையைப் போட்டா அதை சாப்பிட வரும். இன்னும் சிலர் இது சாமி பாம்பு இப்படியே பேசிக்கிட்டு இருக்கும் போது மெல்ல வெளியில வந்தார் நம்ம நாகராஜா.


ஒருத்தர் பெரிய மூங்கில் கம்பை எடுத்து ஒரு அடி கொடுத்தார். நான் சும்மா நிற்காம "சின்ன கம்பா இருந்தா அடி உரைக்கும். பெரிய கம்பில் அடி விழாது" என்றேன்.


உடனே சின்ன கம்பு வந்தது. நான் அதை வாங்கி ஒரே அடி அம்புட்டு தான் மண்டை சிதஞ்சிட்டு. எனக்கு ஒரே பாராட்டு தான். பாம்பு செத்துட்டுனு நினைச்சிட்டு இருக்கும் போது தான் பார்த்தேன். அது சாகலை.


செத்த பாம்பு எடுத்தது ஒரு ஓட்டம். மறுபடியும் விரட்டி அடுத்து கொன்றாச்சி.

எல்லாத்தையும் ஜன்னலில் பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அம்மா அப்படியே ஆச்சரியத்தில்.


பாம்பை அடிச்சி வீரமா வந்து கதவை திறந்ததும் அந்த அம்மாவுக்கு ஒரே சந்தோஷம்.

"நீ இதுக்கு முன்னால பாம்பு அடிச்சிருக்கியா?"


"இல்லமா. இது தான் முதல் தடவை. உங்களுக்காக தான் தைரியமா அடிச்சேன்"


அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சம் இருந்த பயம் போய் மெதுவா நடக்க ஆரம்பிச்சிட்டாங்க. காலையிலும் சாயங்காலமும் வாக்கிங் போய் நல்லா நடக்க ஆரப்பிச்சிட்டாங்க. நான் அமிர்தபுரி போன நேரம் சுதா மணி அம்மா சிங்கபூரில் இருந்தாங்க.


உடம்பு நல்லா ஆனதும் சுதா மணி அம்மா தான் என்னை அனுப்பி வைச்சதா நினைச்சி சந்தோஷப்பட்டாங்க. திரும்ப கனடாவுக்கே போகப் புறப்பட்டுட்டாங்க. எனக்கு கை நிறைய சம்பளமும் கொடுத்து அவுங்க ஞாபகம் என்னைக்கும் இருக்கிற மாதிரி எனக்கு ஒரு முத்து மாலை வாங்கி கொடுத்து என்னை அனுப்பி வைச்சாங்க.


மீண்டும் என் பயணம் தொடர்கிறது.....

கொச்சின் அனுபவம் - பாகம் 1
கொச்சின் அனுபவம் - பாகம் 2
கொச்சின் அனுபவம் - பாகம் 3
கொச்சின் அனுபவம் - பாகம் 4

4 comments:

  1. சுவாரசியமான தொடர் பாம்புக்கு இப்படியா அடிப்பது)))

    ReplyDelete
    Replies
    1. நன்றி. வேற என்ன செய்வது? அவங்க பயத்த போக்கனுமே

      Delete
  2. thodar muluvathum vasithen.

    arumai thodarungal.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திருப்பதி மஹேஷ், தொடர்கிறேன்

      Delete