Saturday 22 August 2015

பாட்டி குசும்பு




ஆடி பூரம் கோயிலுக்கு போறேன். கொஞ்சம் மருதாணி அரைத்துக் கொடுப்பிங்களானு பாட்டி மகள் கேட்டாங்க.

நானும் சரினுட்டேன்.

மரத்தில் பாதி மரத்தை வெட்டி கொண்டு வந்து கொடுத்துட்டு போயிட்டாங்க.

பாட்டிக்கு வந்ததே கோவம். 

இவ்வளத்தையும் எப்படி அரைப்பிங்க. இதை அரைக்க எவ்வளவு நேரம் ஆகும்.
சரி. அரைக்க கொடுத்தவள் இலைய உருவிக் கொடுக்கலாம் இல்ல. நீங்க மாட்டேனு சொல்ல வேண்டியது தானேனு ஏகப்பட்ட திட்டு மகளுக்கு.

நானும் ச்சே பாட்டிக்கு நம்ம மேல எவ்வளவு பிரியம்னு நினைத்து சந்தோஷப் பட்டா அப்புறம் தான் தெரிந்தது. மிக்‌ஷி வம்பா போயிடுமாம். 

அப்புறம் என்ன பாட்டி மகளே.. நானே அரைத்துக்கிடுதேனு வாங்கிட்டு போயிட்டாங்க. நான் எஸ்கேப்.

கோயிலுக்கு அரைத்துக் கொடுப்பதுனா சும்மாவா.

No comments:

Post a Comment