Monday 31 August 2015

கொச்சின் அனுபவம் - பாகம் 3


ஆட்டோவை விட்டு இறங்கியதுமே எனக்கு ஒரே மலைப்பா தான் இருந்தது. பின்ன ஹோம்னு சொன்னாங்க. இங்க வந்து பார்த்தா பெரி.....ய ஆசிரமம். ஹோம்னா பத்து இருபது பேர் இருப்பாங்க. எல்லாரும் கொஞ்சம் வயசானவங்களா இருப்பாங்கனு நினைச்சேன்.

எத்தனை ஏக்கரை வளைச்சி போட்டாங்கனு எனக்கு சரியா சொல்ல தெரியலை. ஆனா மாடியில் இருந்து பார்த்தா இந்த கடைசியில் இருந்து அந்த கடைசி வரை கடல் தான் அளவுகோல்.

வழி நெடுக மரங்களும் செடிகளுமாய் என்னை வா என்று வரவேற்றது. கேட்டு கேட்டு ஒரு வழியா ஆசிரமத்துக்குள் போய்ட்டேன்.

****************

காலைப் பொழுது எல்லாருக்கும் விடிஞ்ச மாதிரி எனக்கும் மிக அருமையாக விடிஞ்சது .

என்ன.....ஒரு கோழி கூவல் சத்தமோ, இல்ல ஒரு காக்கா கரையும் சத்தமோ இல்லாமல்.

சரி..சரி. ... ஒரு ஊர்லயும் கோழி கூவாது, காக்காவுமா கரையாது. அவ்வளவு ஏன் ஒரு பட்சி பறவைப் பறக்கட்டுமே. ம்கூம்.

அவ்வளவு அமைதியான இடம்.

கண்ணுக்கு அழகா கலர் கலராப் பூக்கள் அத்தனையும் செடியில் . பெரிய ,பெரிய மரங்கள். ஒவ்வொன்றும் அண்ணாந்து பார்த்தே கழுத்து சுழிக்கிக்கும்.

கூடை கூடையா மல்லிகைப் பூக்களை ஒரே நேரத்தில் தரையில் கொட்டியதுப் போல் ஆண்களும், பெண்களும் வெள்ளை உடையில் ஒரு இடத்தில் நின்றுப் பேசட்டுமே. ம்கூம்..

காலையிலே துணியெல்லாம் துவைத்து குளிச்சிட்டு. "துணி எங்கம்மா காயப்போட"ன்னு கேட்டா,

"துணிய அப்புறமா காயப்போடலாம். முதல்ல கிச்சன்லப் போய் சாப்பாடு வாங்கனும் லேட் ஆனா சாப்பாடு முடிஞ்சிடும்"ன்னுட்டாங்க

"கிச்சன் இங்க எங்க இருக்கு?"

"ரூம்ல இருந்து கொஞ்ச தூரம் போகனும்"

அங்கப்போய் பாத்தா, கிச்சனா இது. நம்ம வீட்டுலயெல்லாம் ஒரு கேஸ் ஸ்டவ் இல்ல ஒரு கரண்ட் ஸ்டவ் இருக்கும். இது என்னடானா எதோ factory குள்ள வந்துட்டோமோ? எதுக்கும் பக்கத்துலக் கேட்போம்.

"இவ்விடக் கிச்சன் எவ்விட?"

"இதே"

"டிபன் எவ்விட?"

"எவ்விட ஸ்தலம்?"

"தமிழ் நாடு"

"ஒ......வ்.......தமிழ் நாடு"

"ஆமா"

தமிழ் நாடு . தமிழ் என்றுச் சொல்லடா. தலை நிமிர்ந்து நின்னடா. சூப்பர்....

ஒரு வழியா சாப்பாடு கொடுக்கிற இடத்திலப் போய் சாப்பாடு வாங்கிட்டேன்.

சாப்பிட்டு துணியக் காயப்போடலாம்னுட்டு மூன்று இட்லிய சாம்பாரோட சாப்பிட்டு கிளம்பினா

"இப்ப டாக்டர் வர்ர நேரம் அப்புறமா துணிய காயப் போடுமா"

"சரிமா"

ஓகே. நாம துணி துவைத்த நேரம் சரியில்லை.

அப்படி இப்படியும் மணி 12 தொட்டு........

"சரிமா.... இப்ப போய் துணியக் காயப் போட்டு வா. காலையிலே துவைச்சிட்ட"

இப்ப தான் துணிக் காயப்போட நேர கிடைத்தது.

"ஆமா இங்க எங்க காயப்போட?"

"மொட்ட மாடிலப் போய் போடனும்"

"அதுக்கு எப்படி போகனும்?"

"இப்படி நேரா போனா அங்க லிப்ட் ரூம் இருக்கும். அதுல பதினேழாவது மாடி போய் போடனும்"

"என்னது......பதினேழாவது மாடியா? அதுவும் லிப்ட்ல தனியாவா ?"

எங்க ஊர்ல போத்திஸ் ஜவுளிக் கடைக்குப் போனா நாலு மாடி, அஞ்சி மாடி இருக்கும். அங்கேயும் லிப்ட் இருக்கும்.

லிப்ட்ல போகனுனா எப்படியும் கூட குறைந்தது ஒரு அஞ்சி பேராவது வருவாங்க. தனியா போக வேண்டி வராது.

மனசிலே கொஞ்சம் பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கிடாம புறப்பட்டாச்சி .

இதுவரை தனியா லிப்ட்ல போவதில்லை. அப்படியே போனாலும் ஒன்னாவது இரண்டாவது தாண்டியதில்லை.

லிப்ட் போய் சுவிட்ச ஆன் பண்ணினா கதவு திறக்கட்டுமே. ம்கூம்.

அலிபாபா குகை மாதிரி எதுவும் சொல்லனுமோ. பட்டனை எத்தன முறை அழுத்தினாலும் குகைத் திறக்கிற மாதிரி இல்லை.

யாவரும் நலம் படத்தில் மாதவன் நியாபகம் தான் வந்தது. ஒருவேளை அப்படி இருக்குமோ.

பதிமூன்றுக்கும், பதினேழுக்கும் எவ்வளவு வித்தியாசம். கணக்கு போடுறதுக்குள் குகை திறந்தது.

ஒருவழியா லிப்ட் ஆன் ஆகிட்டு. பதினேழாவது மாடி. பதினைந்து மாடி வரைக்கும் லிப்ட். அப்புறம் ரெண்டு மாடி படியேறிப் போகனும்.

மாடி ஏறிப் போய் பார்த்தா சுற்றி பெரிய்ய்ய்யக் கடல். ஆமாங்க. சுற்றி கடல். பார்க்க எவ்வளவு பயமா இருந்துச்சி தெரியுமா . காயப் போட்ட துணி காற்றுலப் பறந்தா கடல்ல தான் போய் விழும் போலயே .

வேகம் வேகமா துணியக் காயப் போட்டுட்டு லிப்டுக்கு வந்துட்டேன் . மறுபடியும் லிப்ட் ஒர்க் ஆகல.

பட்டனை அழுத்தி அழுத்தி ஒரு வழியா லிப்ட்ல கீழ வந்தா இடமே மாறி இருக்கு.

ஆமாங்க .....பட்டன் 0 அழுத்தாம 1அழுத்தினால் அது சரியா 1லப் போய் நின்னுட்டு.

மறுபடியும் 0 அழுத்தி புத்திசாலித்தனமா வெளிய வந்துட்டேன்ல. ஹா ஹா.....

"கண்டுப் பிடிச்சி போயிட்டியா. பரவாயில்லயே..... வெரிகுட்"

"கடல் பார்க்க நல்லா இருந்துச்சா?"

"ஆமாம் நல்லா இருந்துச்சி"

"யாருமே அங்க இருக்க மாட்டாங்களே. உனக்கு பயம்மாயில்லையா? சரியா பன்னிரண்டு மணிக்கு ஒரு பருந்து மட்டும் சுற்றிக்கிட்டு இருக்குமே. பார்த்தியாமா?"

"அதையெல்லாம் நான் பார்க்கலை. துணியக் காயப் போட்டுட்டு வேகமா வந்துட்டேன்"

"அப்படி தான் பயப்படக் கூடாது. அம்மா எப்போதும் உன் கூடவே இருப்பாங்க"

இனி பன்னிரண்டு மணிக்கு துணி காயப் போடப்போவேன்.

எங்க நம்ம நினைக்கிறதெல்லாம் நடக்கிறது . இப்ப கூட பன்னிரண்டு மணிக்கு தான் துணிய காயப் போட்டுட்டு வந்தேன். இப்ப கொஞ்சம் கொஞ்சமா பயம் போயிட்டுங்க....

சொல்ல மறந்துட்டேனே . முதல் நாள் லிப்ட் ஏன் ஒர்க்காகலத் தெரியுமா . சொன்னா சிரிக்க கூடாது.

கரண்ட் போய்டு. போய்டு வந்தது. அதான் ஹா...ஹா....ஹா.....

கொச்சின் அனுபவம் - பாகம் 1
கொச்சின் அனுபவம் - பாகம் 2

No comments:

Post a Comment