எர்ணாகுளம் to அமிர்தபுரி
.......................................................
அப்பாடா.......ஒருவழியா எர்ணாகுளம் வந்து புக்கிங் ஆபிஸ்சர் சொன்ன பஸ்ல ஏறி உட்கார்ந்துட்டேன்.
நான் எந்த நடத்துனர் கிட்ட அட்ரஸ்ச காட்டிக் கேட்டேனோ அவர் தான் நான் போகும் பஸ்சுக்கு நடத்துனர்.
அப்பாடா .. நான் தப்பிச்சேன். அவருக்குக்கோ தமிழ் தெரியாது. எனக்கோ மலையாளம் தெரியாது .....எப்படி...
குருவாயூர் அப்பன் காப்பாற்றிட்டான்.
காயன் குளம் வந்து இறங்கையில் மணி 8.30 pm. அட இந்த ஊர் பஸ்டாண்டு என்னவோப் பெருசா தான் இருக்கு. ஆனா கரண்ட் மட்டும் இல்ல.
எனக்கு இருட்டுனாலே கொஞ்சம் பயம். ஆனாலும் அங்கேயும், இங்கேயுமா கொஞ்சம் லைட் கண்சிமிட்டியது.
பக்கத்தில இருந்தவர்ட இந்த பஸ் "அமித்புரி" போகும். (மலையாளம். தெரிஞ்சவங்க-) மன்னிக்கவும்.
பஸ்ல போனா அஞ்சி ரூபா சார்ச். ஆட்டோல போனா கூடுதல் சார்ச். யோசித்துப் பார்த்தேன் . இங்கேயே இருட்டு கசமா இருக்கு. "அமிர்தபுரி" எப்படி இருக்குமோ?
எதற்கு வம்பு. பஸ்டாண்டுல பஸ்ச நிப்பாட்னா ஆசிரமத்திற்கு போகனுமே. சரி இவ்வளவு தூரம் வந்தாச்சி. முக்கா கிணறு தாண்டியாச்சி இனி என்ன பாத்துக்கிடுவோம்.
ஆட்டோக்காரர்ட போய் "அமிர்தபுரி ஆசிரமம் போகனும்".
"இருநூறு ருபாத் தரனும்"
"நான் நூற்றி ஐம்பது தர்றேன்"
"இல்லமா ..பகல்ல முன்னூறு வாங்கும். இராவுக்கு தான் கேட்டேன்"
வேற வழியில்லை.
"சரி இருநூறு தரும்"
ஆட்டோ புறப்பட்டது. கொஞ்ச தூரம் வரை ஏதோ கொஞ்சம் வெளிச்சமா இருந்துச்சி.....
ஆட்டோ போய்க்கிட்டே இருக்கு.... கரும் இருட்டில் .....டபக்....டபக்...டபக்.... என்ன சத்தம் ....என் இதயம் தாங்க துடிக்கிறது...
பாஷை வேறத் தெரியாது. ஆட்டோக்காரர் பெரிய மீசை வேற வைச்சிருக்காரு. கடவுளே என்னைய மட்டும் காத்து.....
கொஞ்ச அமைதியாப் போன ஆட்டோ எடுத்து பாருங்க ஒரு வேகம்.
இன்றைக்கு நான் செத்தேன் .கடவுளே சொந்த ஊர விட்டு வந்து பிழைப்புக்காக யாருக்குமே தெரியாம அனாதையாவா நான் சாகனும்.
என்ன ஆனாலும் சரி தைரியத்த மட்டும் விடக் கூடாது. எங்க நாம தைரியமா இருந்தாலும் அப்ப தான் ஆந்தையும், நாயும் ஒன்னா கையப் பிடிச்சிக்கிட்டு பாட்டு பாடுதுக .. அமைதியா பேசாம இருந்தா தானே பயம். எதையாவது பேசிகிட்டேப் போவோம்.
"அண்ணே ரோடல்லாம் ஏன் இருட்டா இருக்கு?"
"இது முனிசிபால்டி ஏரியாமா"
ஆட்டோக்காரர் என்னை அம்மானுச் சொன்னதுல கொஞ்சம் தைரியமா இருந்துச்சி.
"எல்லாரும் விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் வேலைக்குப் போறவங்க. அதனால சீக்கிரமா தூங்கிடுவாங்க"
என் மகா ஊர்லயும் இப்படித் தான். சீக்கிரமா தூங்கிடுவாங்க. பிறகு நம்மள மாதிரி மூணு மணி வரைக்கும் இராப்பாடியாவா (கூர்கா) இருப்பாங்க.
"சரிமா .... இங்கே இருந்து ஒரு அஞ்சி கிலோ மீட்டர் உள்ளப் போனா ஆசிரமம் வந்துடும். பேக் ரெண்டும் வெயிட்டா இருக்கா?"
வெயிட்....டா ..... என்னச் சொல்லுதார்னு புரியலையே.....
"இல்லமா. பேக்கத் தூக்கிட்டு நடந்துடுவியானுக் கேட்டேன்"
"நடக்கனுமா....எதுக்கு? ஆசிரமத்தில கொண்டு விட மாட்டிங்களா?"
சும்மா ஒரே இருட்டா அங்கேயும் இங்கேயுமா நட்சத்திரம் மாதிரி மின்னுது. இதில் அஞ்சி கிலோ மீட்டர் நடக்கனுமா.
எனக்கு பயத்துல கண்ணக் கட்டிக்கிட்டு தலையெல்லாம் சுற்ற ஆரம்பிச்சிட்டு.
"இல்லமா இங்க இறங்கினா ஒரு பாலம் வரும் அதில போனாப் பக்கம்"
"நான் ஊருக்கு புதுசு ...ண்ணே.... எனக்கு இங்க வழியெலாம் தெரியாது. தயவுசெய்து நீங்களே என்னைப் பத்திரமா கொண்டு விட்டுடுங்க"
பாலத்துக்கு ஒரு பக்கம் கடல். மறுப்பக்கத்தில் கடல் தண்ணி ஒரு இடத்தில மீன் பிடிக்கும் போட்டெல்லாம் நிற்கும் .
ஆஹா.....எனக்கு இருட்டுனாலேப் பயம். அதிலேயும் இருட்டுல தண்ணீ.......
"தண்ணீயா.....கட......ல்"
என்னைய விட்டா சொந்த ஊருக்கேப் போயிடுவேன். ஆனா ஒத்தையில் அதுவும் இருட்டுல கடல் பக்கமா.
"அண்ணே.... நல்லா இருப்பிக.....என்னைய அந்தண்ட. கொண்டுப் போய் விட்டுடுங்க"
"அப்போ கூட ஐம்பது ரூபாக் கொடுக்கனும்"
"சரி....ண்ணே.... தாறேன். போங்க"
நமக்கு அம்பது ரூபாயா பெருசு......
டிக்.......டிக்.......டிக்........டிக். ஐயோ இந்த "கந்த சஷ்டி "கவசத்த எங்க வச்சேன்னு தெரியலையே....
ஆ.........கடல்....ஐயோ...இந்த காத்து வேற பேய்த் தனமா அடிக்குதே .....
ராராரா ரிரிரி ரிரி லுலுலு ச்சே பயத்துல கவசம் கூட சொல்ல வர மாட்டுக்குதே.
"அந்த பக்கமா போனா பாலம் உண்டு. அதில ஆட்டோ போகாது. சின்ன பாலம் அகலம் குறைச்சி உண்டு. ஆனா நடக்கனும்"
"புதுஷாயிட்டு வரும் போது தனியா வரக்கூடாது. வேறு யாரும் இன் நேரத்துக்கு வராது. நான் உனக்கு அண்ணன் மாதிரி. என்மேல் பயம் வேண்டா. எனக்கு கொஞ்சும் தமிழ் அறியும்"
"உங்க தமிழ்நாடு பயம் உண்டு. இங்க எல்லாரும் நல்லவர்"
ஆஹா சந்தடி சாக்கில உண்மையெல்லாம் சொல்லுதாரே. நம்ம பயத்த வெளியிலக் காட்டிக்கக் கூடாது.
அங்க இங்க திரும்பாம ஒரே நேர் பார்வையில் கண்கள் இரண்டும் ஆசிரமத்தைத் தேடியது.
என் மகன் கூட இராமேஸ்வரம் போனப்ப நல்லா இருட்டிட்டு.
"வாங்கம்மா. கடல் கிட்ட போகலாம்"
"இருக்கட்டும் . காலையிலப் பாத்துக்கிடலாம்"
நம்ம பயம் அவருக்கு எப்படித் தெரியும்.
ஒருவழியா அந்த முருகப் பெருமாள் கண்திறந்துப் பாத்துட்டார். ஆமாங்க .....
அமிர்தபுரி ஆசிரமம் வந்துட்டு......ஹய்யா.
அமிர்த்புரி மர்மம் தொட.......ரு.......ம்.
கொச்சின் அனுபவம் - பாகம் 1
அப்பாடா.......ஒருவழியா எர்ணாகுளம் வந்து புக்கிங் ஆபிஸ்சர் சொன்ன பஸ்ல ஏறி உட்கார்ந்துட்டேன்.
நான் எந்த நடத்துனர் கிட்ட அட்ரஸ்ச காட்டிக் கேட்டேனோ அவர் தான் நான் போகும் பஸ்சுக்கு நடத்துனர்.
அப்பாடா .. நான் தப்பிச்சேன். அவருக்குக்கோ தமிழ் தெரியாது. எனக்கோ மலையாளம் தெரியாது .....எப்படி...
குருவாயூர் அப்பன் காப்பாற்றிட்டான்.
காயன் குளம் வந்து இறங்கையில் மணி 8.30 pm. அட இந்த ஊர் பஸ்டாண்டு என்னவோப் பெருசா தான் இருக்கு. ஆனா கரண்ட் மட்டும் இல்ல.
எனக்கு இருட்டுனாலே கொஞ்சம் பயம். ஆனாலும் அங்கேயும், இங்கேயுமா கொஞ்சம் லைட் கண்சிமிட்டியது.
பக்கத்தில இருந்தவர்ட இந்த பஸ் "அமித்புரி" போகும். (மலையாளம். தெரிஞ்சவங்க-) மன்னிக்கவும்.
பஸ்ல போனா அஞ்சி ரூபா சார்ச். ஆட்டோல போனா கூடுதல் சார்ச். யோசித்துப் பார்த்தேன் . இங்கேயே இருட்டு கசமா இருக்கு. "அமிர்தபுரி" எப்படி இருக்குமோ?
எதற்கு வம்பு. பஸ்டாண்டுல பஸ்ச நிப்பாட்னா ஆசிரமத்திற்கு போகனுமே. சரி இவ்வளவு தூரம் வந்தாச்சி. முக்கா கிணறு தாண்டியாச்சி இனி என்ன பாத்துக்கிடுவோம்.
ஆட்டோக்காரர்ட போய் "அமிர்தபுரி ஆசிரமம் போகனும்".
"இருநூறு ருபாத் தரனும்"
"நான் நூற்றி ஐம்பது தர்றேன்"
"இல்லமா ..பகல்ல முன்னூறு வாங்கும். இராவுக்கு தான் கேட்டேன்"
வேற வழியில்லை.
"சரி இருநூறு தரும்"
ஆட்டோ புறப்பட்டது. கொஞ்ச தூரம் வரை ஏதோ கொஞ்சம் வெளிச்சமா இருந்துச்சி.....
ஆட்டோ போய்க்கிட்டே இருக்கு.... கரும் இருட்டில் .....டபக்....டபக்...டபக்.... என்ன சத்தம் ....என் இதயம் தாங்க துடிக்கிறது...
பாஷை வேறத் தெரியாது. ஆட்டோக்காரர் பெரிய மீசை வேற வைச்சிருக்காரு. கடவுளே என்னைய மட்டும் காத்து.....
கொஞ்ச அமைதியாப் போன ஆட்டோ எடுத்து பாருங்க ஒரு வேகம்.
இன்றைக்கு நான் செத்தேன் .கடவுளே சொந்த ஊர விட்டு வந்து பிழைப்புக்காக யாருக்குமே தெரியாம அனாதையாவா நான் சாகனும்.
என்ன ஆனாலும் சரி தைரியத்த மட்டும் விடக் கூடாது. எங்க நாம தைரியமா இருந்தாலும் அப்ப தான் ஆந்தையும், நாயும் ஒன்னா கையப் பிடிச்சிக்கிட்டு பாட்டு பாடுதுக .. அமைதியா பேசாம இருந்தா தானே பயம். எதையாவது பேசிகிட்டேப் போவோம்.
"அண்ணே ரோடல்லாம் ஏன் இருட்டா இருக்கு?"
"இது முனிசிபால்டி ஏரியாமா"
ஆட்டோக்காரர் என்னை அம்மானுச் சொன்னதுல கொஞ்சம் தைரியமா இருந்துச்சி.
"எல்லாரும் விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் வேலைக்குப் போறவங்க. அதனால சீக்கிரமா தூங்கிடுவாங்க"
என் மகா ஊர்லயும் இப்படித் தான். சீக்கிரமா தூங்கிடுவாங்க. பிறகு நம்மள மாதிரி மூணு மணி வரைக்கும் இராப்பாடியாவா (கூர்கா) இருப்பாங்க.
"சரிமா .... இங்கே இருந்து ஒரு அஞ்சி கிலோ மீட்டர் உள்ளப் போனா ஆசிரமம் வந்துடும். பேக் ரெண்டும் வெயிட்டா இருக்கா?"
வெயிட்....டா ..... என்னச் சொல்லுதார்னு புரியலையே.....
"இல்லமா. பேக்கத் தூக்கிட்டு நடந்துடுவியானுக் கேட்டேன்"
"நடக்கனுமா....எதுக்கு? ஆசிரமத்தில கொண்டு விட மாட்டிங்களா?"
சும்மா ஒரே இருட்டா அங்கேயும் இங்கேயுமா நட்சத்திரம் மாதிரி மின்னுது. இதில் அஞ்சி கிலோ மீட்டர் நடக்கனுமா.
எனக்கு பயத்துல கண்ணக் கட்டிக்கிட்டு தலையெல்லாம் சுற்ற ஆரம்பிச்சிட்டு.
"இல்லமா இங்க இறங்கினா ஒரு பாலம் வரும் அதில போனாப் பக்கம்"
"நான் ஊருக்கு புதுசு ...ண்ணே.... எனக்கு இங்க வழியெலாம் தெரியாது. தயவுசெய்து நீங்களே என்னைப் பத்திரமா கொண்டு விட்டுடுங்க"
பாலத்துக்கு ஒரு பக்கம் கடல். மறுப்பக்கத்தில் கடல் தண்ணி ஒரு இடத்தில மீன் பிடிக்கும் போட்டெல்லாம் நிற்கும் .
ஆஹா.....எனக்கு இருட்டுனாலேப் பயம். அதிலேயும் இருட்டுல தண்ணீ.......
"தண்ணீயா.....கட......ல்"
என்னைய விட்டா சொந்த ஊருக்கேப் போயிடுவேன். ஆனா ஒத்தையில் அதுவும் இருட்டுல கடல் பக்கமா.
"அண்ணே.... நல்லா இருப்பிக.....என்னைய அந்தண்ட. கொண்டுப் போய் விட்டுடுங்க"
"அப்போ கூட ஐம்பது ரூபாக் கொடுக்கனும்"
"சரி....ண்ணே.... தாறேன். போங்க"
நமக்கு அம்பது ரூபாயா பெருசு......
டிக்.......டிக்.......டிக்........டிக். ஐயோ இந்த "கந்த சஷ்டி "கவசத்த எங்க வச்சேன்னு தெரியலையே....
ஆ.........கடல்....ஐயோ...இந்த காத்து வேற பேய்த் தனமா அடிக்குதே .....
ராராரா ரிரிரி ரிரி லுலுலு ச்சே பயத்துல கவசம் கூட சொல்ல வர மாட்டுக்குதே.
"அந்த பக்கமா போனா பாலம் உண்டு. அதில ஆட்டோ போகாது. சின்ன பாலம் அகலம் குறைச்சி உண்டு. ஆனா நடக்கனும்"
"புதுஷாயிட்டு வரும் போது தனியா வரக்கூடாது. வேறு யாரும் இன் நேரத்துக்கு வராது. நான் உனக்கு அண்ணன் மாதிரி. என்மேல் பயம் வேண்டா. எனக்கு கொஞ்சும் தமிழ் அறியும்"
"உங்க தமிழ்நாடு பயம் உண்டு. இங்க எல்லாரும் நல்லவர்"
ஆஹா சந்தடி சாக்கில உண்மையெல்லாம் சொல்லுதாரே. நம்ம பயத்த வெளியிலக் காட்டிக்கக் கூடாது.
அங்க இங்க திரும்பாம ஒரே நேர் பார்வையில் கண்கள் இரண்டும் ஆசிரமத்தைத் தேடியது.
என் மகன் கூட இராமேஸ்வரம் போனப்ப நல்லா இருட்டிட்டு.
"வாங்கம்மா. கடல் கிட்ட போகலாம்"
"இருக்கட்டும் . காலையிலப் பாத்துக்கிடலாம்"
நம்ம பயம் அவருக்கு எப்படித் தெரியும்.
ஒருவழியா அந்த முருகப் பெருமாள் கண்திறந்துப் பாத்துட்டார். ஆமாங்க .....
அமிர்தபுரி ஆசிரமம் வந்துட்டு......ஹய்யா.
அமிர்த்புரி மர்மம் தொட.......ரு.......ம்.
கொச்சின் அனுபவம் - பாகம் 1
ningale payanthu vasippavaraiyum aduthhtu enna nadakkumonu pathatra pada vaikkum nilamai. eppadiyo pathirmaa ninaitha edathil sernthathil santhosham. thodarkiren.
ReplyDeleteநல்ல வர்ணனை... தொடர்ந்து எழுதுங்கள்...
ReplyDelete