Saturday 20 February 2016

பள்ளி சேட்டை

ஒன்னாம் வகுப்பில இருந்து எட்டாம் வகுப்பு வரை நாங்க பண்ணாத சேட்டையே கிடையாது.

ரெண்டு ப்ரீட் ஒழுங்கா நடந்தா மூனாம் ப்ரீட் கண்டிப்பா கேம்ஸ் தான்.அதிலும் கேம்ஸ் டீச்சர் பாதி நாள் வரமாட்டாங்க.

ஒருத்தர் மேல் ஒருத்தர் குனியவைச்சு சுவரை தாண்டிப் பக்கத்து தோட்டத்தில மாங்கா,புளியங்கா கொடுக்காபுளி பறிச்சி தின்போம். அதுவும் போக பக்கத்தில ஒடுர வாய்கால்ல நல்லா குதியாட்டம் போடுவோம்.

சில நேரத்தில் க்ளாஸுக்கு டீச்சர் வர மாட்டாங்க. ஸ்கூல் பக்கத்தில ஒரு கல்யாண மண்டபம். கேட்கனுமா ஆட்டம் பாட்டத்துக்கு.

நாங்க யாரு இருக்கிற பயந்தாங்கோலி பிள்ளைகளை எல்லாம் பேய் கதை சொல்லி பயம் காட்டி அலர விடுவோம். இப்படியே போய்கிட்டு இருந்த சந்தோஷத்தில பெரிய இடி விழுந்தது போல் ஒட்டு மொத்தமா எல்லாரும் எட்டாம் வகுப்பு பாஸ் பண்ணிட்டோம்.

பாஸ் ஆனா கையோட பக்கத்து ஸ்கூல்ல அட்மிஷன் வாங்கிட்டேன். ஆனா அந்த ஸ்கூல்ல படிக்க கூடாது நான் சொல்லுர ஸ்கூல்ல தான் படிக்கனும்னு வீட்டில கட்டாயப் படுத்திட்டாங்க. வேற வழி.

முதல் நாள் வகுப்பில் எல்லாம் முகம் தெரியாத பிள்ளைகள். என்னோட படிச்ச பிள்ளைகள் எல்லாம் வேற ஸ்கூல்ல.

ரெண்டாம் நாள் ஸ்கூல் ப்ரேயர்ல யார்ரெல்லாம் டியூசன் படிக்கிரீங்கனு கேட்டதும் நான் முதல் ஆளா கையத்தூங்கி மாட்டிக் கிட்டேன்.ஆமாம் அப்படி தான் சொல்லனும்.டியூசன் என்கிற பேரில் கொஞ்சப் பிள்ளைகளை தனியா ஒரு ரூமில் வைச்சிருந்தாங்க.

நையிந்த் புக்கெல்லாம் கைக்கு வந்துட்டு ஆனா க்ளாஸ் மட்டும் எடுக்க ஆரம்பிக்கலை.நல்லா படிக்கனும்கிற ஆர்வத்தில ஆஸ்டலுக்கு வேற வந்தாச்சி.

ஒரு வாரமா பாடம் எதுவுமே நடத்த டீச்சர் யாருமே வரலை. அப்பறமா ஒரு டீச்சர் வந்தாங்க்ல். வந்ததுமே கேள்வி மேல் கேள்வி கேட்டால் ஒருத்தருக்கும் ஒன்னும் தெரியலை.ஆமா க்ஸாஸ் எடுத்திருந்தா தானே எதுவும் தெரியும்.

ஒன்னு முதல் எட்டு வரை ஐந்து ராங்க்கில் இருந்த எனக்கோ சுத்தமா எதுவுமே விளங்கலை.மறுநாள் பெரிய போடில் எ, பி ,சி ,டி எழுதி போட்டாங்க. ரெண்டாம் நாள் அ,ஆ, இ,ஈ.அவ்வளவு தான். நான் அழுதுடவே செஞ்சேன்.

மறுநாளில் இருந்து ஸ்கூல் கட் அடிச்சிட்டு ப்ரண்ட் யாருடைய வீட்டிலாவது மாற்றி மாற்றி நாளை தள்ளியாச்சி.அப்படியே ஒரு மாதம் ஆனது. ரேங்க் ரிப்போட் கொடுத்தாங்க. சொல்லவே வெட்கப்படும் மார்க். மொத்தத்தில் 25 மார்க். அதான் முதல் மார்க்கும் கூட.

கையெழுத்து வாங்க வீட்டுக்கு வந்தால் ஒரே திட்டு.அப்போ தான் பெரிய ஐயா கேட்டாங்க.உனக்கு என்ன பிரச்சனை தயங்காம சொல்லுனு. நடந்த கதையெல்லாம் ஒன்னு விடாமல் சொன்னேன்.

அப்பறம் தான் தெரிந்தது அந்த ஸ்கூல் ஹெட்மாஸ்டர் பெரிய ஐயா கொழுந்தியார்னு.கேட்கணுமா ஒரே லெப்ட் அன் ரைட் தான்.பயங்கிற வாக்குவாதம்.தன்னோட அத்தை மகள்ட சண்டைப் போட்டு என்னைப் போல் இருந்த பிள்ளைகளை எல்லாம் விடு விச்சி எல்லாருக்கும் நல்ல வழி காட்டினாங்க.

இதை இங்க ஏன் சொல்லுறேன்னா. என்னைப் போல் படிக்காத குடும்பத்தில் இருந்து படிக்க வரும் பிள்ளைகளோட படிப்பு பாதியிலே கெட்டுப் போக ஒரு சில இடங்களில் பள்ளி நிர்வாகமே காரணமா இருக்கிறாங்க.

சமீபத்தில் கூட நர்ஸ்ஸிங் படிக்கும் மாணவ மாணவிகள் நிலை குறித்து தாய் தந்தையர் வேதனை படுவதை பார்க்கும் போது பரிதாபகமா இருக்கு.

1 comment:

  1. உண்மைதான், இப்படியும் கல்வி நிலையங்களிருப்பது வேதனையளிக்கிறது.

    ReplyDelete