Monday 7 September 2015

முனிமா



முனிமா - அளவுக்கு அதிகமான அன்புக்கும், பாசத்திற்கும் ஏன் கோவத்திற்கும் சொந்தக் காரி. வெள்ளை மனம் கொண்டவள். யாரிடமும் மனதில் சீக்கிரத்தில் ஒட்டிக் கொள்ளும் குணம் கொணடவள்.

தன் தங்கையின் கல்யாணத்திற்காக வந்திருந்த என்னை வா என்று சொல்லா விட்டாலும் தங்கையுடன் கோவம் கொண்டு எனக்காக சண்டை இட்டு எனக்கு பிடித்த ஸ்பெஷல் தோசையை வரவழைத்து பாசத்தைக் காட்டியவள்.

கல்யாண வீட்டில் தான் பெண்ணுக்கு அக்கா என்ற நிலை மறந்து அங்கும் இங்கும் ஓடி ஓடி வேலை செய்து புன்னகையை மட்டுமே முகத்தில் காட்டி பூரிப்பு அடைந்தவள்.


எல்லார் மனதிலும் ஒட்டிக் கொண்டவள் என்னை மட்டும் எப்படி விடுவாள். ஒட்டிக் கொண்டாள் பாசத்தோடு. ஆரம்பத்தில் அவள் கோவம் கண்டு மிரண்ட என்னை தன் அன்பினால் சிறைப் பிடித்தாள்.

முனிமா அவளுக்கு மிகவும் பிடித்த பெயர் போல் அடிக்கடி தன் பெயரை தானே சொல்லி சந்தோஷம் அடைவதைப் பார்க்கனுமே.

கல்யாண வீட்டில் அவ்வளவு கூட்டத்திலும் என்னை சரியாக கவனித்துக் கொண்டாள். மணப் பெண்ணிற்கு அலங்காரம் செய்த என்னை வியப்புடன் நோக்கி தன் கல்யாணத்தில் நான் இல்லை என்ற கவலைக் கொண்டவளை இருத்தி அலங்காரம் செய்யத என்னை கட்டிக் கொண்டு அன்பைக் காட்டியவள்.

சடங்கு சம்பிரதாயம் முடிந்து புறப்பிட்ட என்னை கண்ணில் நீர் கொண்டு அனுப்ப மனமில்லாமல் வீட்டுக்கே ஆட்டோவை வரவழைத்து சிறு குழந்தையை அனுப்புவது போல் அனுப்பியவள்.

இன்று தினமும் சாப்பிட்டாச்சா, தூங்கலையா நேரத்துக்கு சாப்பிடுங்கனு அன்பு தொல்லைக் கொடுப்பவள். இவள் கள்ளமில்லா சிரிப்பில் மயங்கிய நான். எடுத்துக் கொண்டோம் நினைவாகப் புகைப் படம்.

.

No comments:

Post a Comment