Sunday 27 December 2015

ஏகாதசி விரதம்



காவத்து, குர்க்கை, துவாசி. இதெல்லாம் என்னனு தெரியுமா. எனக்கே இன்னைக்கி தான் தெரியும். திருவாதிரை களியோடு ஏழு வகை கூட்டுக்கு சேர்த்து கொண்ட கிழங்கு வகைகள் தான் இது.

பக்கத்து ஆத்து மாமி காவத்து தெரியுமானு கேட்டாங்க. எனக்கு தெரியாதே மாமி. நீங்க எதை சொல்றேள்ன. அது ஒரு கிழங்கு. பார்க்க கரடுமுரடா இருக்கும். நறுக்கினா வழ வழனு இருக்கும்னாங்க

கோயமுத்தூர்லயும், கேரளாலயும் தான் கிடைக்கும். அதுவும் திருவாதிரை அன்னைக்கு மட்டும் தான் கிடைக்கும்னாங்க.


நீங்க என்ன கிழங்கை சொல்லுதிங்கனு தெரியலையே மாமினேன். உடனே வீட்டில் வெட்டி வைச்சிருந்த கிழங்கை காட்டி இது தான் காவத்துனாங்க.

ஹ்ஹாஹா. இது வள்ளிக் கிழங்கு மாமி. எங்க ஊரில் பொங்கலுக்கு சமைப்போம்னேன்.தை மாசம் பிறந்தால் எங்க ஊரில் கிடைக்காத காய்கறிகளே கிடையாது.

கோயமுத்தூர்ல மரவள்ளி கிழங்கு தெரிஞ்சவங்க. வள்ளிக் கிழங்கை காவத்துங்கிறாங்க.அப்பறம் குர்க்க கிழங்கு. அட நம்ம ஊர் சிறுகிழங்கை இங்க குர்க்க கிழங்குனு சொல்லுறாங்க.

துவாசி.இது என்ன தெரியுமா. நம்ம ஊர் நெல்லிக்காய் தான்.ஏகாதசி மறுநாள் துவாதசி. அன்னைக்கி நெல்லிக்காய் துவையல், பச்சடி செய்வோம். அதை தான் இவுங்க நெல்லிக்காய்க்கு துவாசினு சொல்லுறாங்க.

திருவாதிரை களி. திரு வாக்கு அளி என்பது தான் திரிச்சி திருவாதிரை களி ஆயிட்ட்டாம். அதைப் பற்றியெல்லாம் எனக்கு சரியா தெரியாது. ஆனா களி தெரியாம இருக்குமா.

திருநெல்வேலி பக்கம் பச்சரியோடு பயத்தம் பருப்பை வறுத்து பொடி செய்து சர்க்கரை வெல்லத்தோடு நெய் கலர்ந்து மணக்க மணக்க களி செய்வோம்.ஆனா இங்க வெறும் பச்சரிசியை ஊற வைத்து இடுத்து களி கிண்டி சர்க்கரைப் பாகை தனியா செய்து வைக்கிறாங்க.

களியை பாகுல் தொட்டு சாப்பிடனும். அதோடு ஏழு வகை காய்கறி கூட்டு செய்து பதினோறு இலை போட்டு படையல் வைக்கிறாங்க.

சிவனுக்கு ராத்திரி பூஜைனு இரவே படையல் போட்டு பூஜை செய்றாங்க. பூஜையில் களியும்,கூட்டும் தான் ஸ்பெஷல்.

ஒரு சிலர் ஏகாதசி அன்று விரதம் இருந்ததைப் போல் இன்று திருவாதிரைக்கி கோதுமை உணவு எடுக்கிறாங்க.விரதம் பிடிக்கும் போது துவாசினு( நெல்லிக்காய்)சொல்லக் கூடாதாம்.

நாளை மறுபடியும் துவாதேசி சாப்பாடு நெல்லிக்காய், அகத்தி கீரையோடு வேப்பம்பூ ரசம்.

விரதத்தில் எத்தனை வித்தியாசம்.இந்த வருஷம் விரதம் எனக்கு புது அனுபவத்தையே கொடுத்தது.
மார்கழி மறக்க முடியாத மாதம்.

No comments:

Post a Comment