Sunday 27 December 2015

திறமையான டிரைவர்





ஒருமுறை நானும் என் பையனும் திருநெல்வேலியில் இருந்து சென்னையை நோக்கி பஸ்ஸில் பயணம் செய்தோம்.

பஸ் பயணத்தில் போதுவா நான் தூங்க மாட்டேன். பையனோ குளிர் தாங்காமல் சால்வையால் போர்த்திக்கிட்டு நல்ல தூக்கம்.


நாங்க இருந்த பஸ்ஸின் முன் சீட்டில். விடியற் காலை நேரம் அனைவரும் நல்ல உறக்கத்தில்.

சென்னையை நெருக்கும் தருணத்தில் பஸ் தாறுமாறா வளைந்து நெளிந்து ஒரு ஷடண் ப்ரேக் போட்டு நின்றது.

ஒரு நிமிஷம் எல்லாரையும் தூக்கத்தில் இருந்து தூக்கி வாரிப் போட்டுட்டு.

என் கண் முன்னே ஒரு அம்பாஸ்டர் கார் இங்கிலீஸ் படத்தில் பல்டீ அடிப்பது போல் அடித்து பறந்து போய் அப்படியே தடுப்பு வேலியை தாண்டி மல்லாக்க விழுந்தது.

பஸ் டிரைவர் முதல் எல்லாரும் இறங்கி போய் காரில் வந்தவர்களின் நிலை அறிந்து சில உதவிகளை செய்தார்கள்.

கார் டிரைவருக்கு கொஞ்சம் காயம். உடன் இருந்த பெரியவர் நிறையவே பயந்து போய் இருந்திருக்கார்.

விபத்தை பார்த்துட்டு வந்து பையன் தான் சொன்னார். கண் முன்னாடி நடந்த சம்பவத்தை பையனிடம் விளக்கி சொல்லும் போது தான் பையன் கொஞ்சம் வெளியில் எட்டிப் பாருங்கமானு.

பார்த்தால் பெரிய குளம் போல் தண்ணீர் நிறைந்து இருக்கு. நாங்கள் இருக்கும் பஸ்ஸோ குளத்துக் கரையின் விளிம்பில். கொஞ்சம் நகர்ந்தாலும் எல்லாரும் குளத்தில் தான்.

நினைத்துப் பார்க்கவே பயங்கராமா இருந்தது.பையன் அந்த நேரத்திலும் இந்த குளிரில் தண்ணீர்குள்ள விழுந்தா என்னா ஆவுரதுனு காமெடி செய்து என் பயம் போக்கினான்.

உண்மையில் சொல்லுறேன் அந்த டிரைவரின் பெயர் தெரியாது. ஆனால் அவர் மட்டும் அன்று கொஞ்சம் கவனம் தவறி இருந்தால் நடக்க இருந்திருக்கும் விபத்தைச் சொல்லி மாளாது.

வாழ்த்துகள். டிரைவரின் திறமைக்கு ஒரு பெரிய சல்யூட்

No comments:

Post a Comment