Sunday 27 December 2015

கறிவேப்பிலை துவையல் போச்சே



பக்கத்து வீட்டில் கறிவேப்பிலை மரம் நல்லா செழித்து பச்சை பசேல்னு வளர்ந்து நிற்குது. பார்க்கும் போதெல்லாம் கேட்டு பறிச்சி துவையல் அரைத்து சாப்பிடனும்னு ரொம்ப நாள் ஆசை.

கடையில் வாங்கும் கறிவேப்பிலை பெரிய இலையா பார்க்க வேப்பிலை மாதிரி இருக்கும். அதுவும்மில்லாம பத்து ரூபாய்க்கு வாங்கினாக் கூட கனத்த குச்சுயோடு ஒடித்து தருவாங்க. கொஞ்சம் இலை இருக்கிறாப்பில தாங்கனு கேட்டா கோவமா எங்களுக்கு எடைப் போட்டு தான் தாராங்கனு சொல்லுவார்.

ரெண்டு நாளா செண்பகப் பூ கொடுத்து பக்கத்து வீட்டில் பேசி பழக்கம் பிடிச்சுட்டேன். பேசினதுக்கு அப்பறம் தான் தெரிந்தது அவுங்களுக்கு சொந்த ஊர் திருநெல்வேலினு.


கேட்கனுமா . பேச்சோடு பேச்சா கறிவேப்பிலை பற்றி பேச ஆரம்பிச்சுட்டேன். கறிவேப்பிலை துவையல், கறிவேப்பிலை இட்லி பொடியெல்லாம் பற்றி பேசிட்டு கொஞ்ச கறிவேப்பிலையும் கேட்டு வாங்கிட்டேன்.

ஆசை ஆசையா மணக்க மணக்க நைட்டே அரைச்சு வைச்சாச்சு. காலையில தோசைக்கு துவையலைப் பார்த்தால் காணும்.

ஆஹா அரைச்ச தேவையலை இங்க தானே வைச்சோம். அதற்குள் எங்கு போயிருக்கும்.பாத்திரம் கழுவும் சிங்கில் அரைத்து வைச்சிருந்த துவையல் பாத்திரம் காலியா கிடக்கு.

பாட்டிமா கிட்ட துவையலை என்ன செஞ்சிங்கனு கேட்டால். எனக்கு தெரியாது.கறிவேப்பிலை துவையலா ஏது. நைட்டு சாப்பிட கொடுத்தேனேனு சொன்னா.நான் பார்க்கலைனு சொல்லிட்டாங்க.

என்னடா இது கறிவேப்பிலை துவையலுக்கு வந்த சோதனை. சரி நமக்கு துவையல் கொடுத்து வைக்கலை.

கொஞ்ச நேரம் கழித்து பாட்டி அது கறிவேப்பிலை துவையலா. நான் மருதாணினு நினைச்சி குப்பையில் போட்டுட்டேன். அட டா ரொம்ப ருசியா இருந்துச்சே.

இப்ப கவலைப் பட்டு என்ன செய்ய. வடிவேல் ஸ்டைல்ல துவையல் போச்சே.

1 comment:

  1. நல்ல வேளை மருதோன்றிதானேன்னு நெனச்சு உள்ளங்கை-ல கோலம் போடாம இருந்தாங்களே ...பாராட்டலாம்...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete