Sunday 27 December 2015

வைகுண்ட ஏகாதசி விரதம்





விரதன் என்றாலே இருவேளை உணவோடு இரவு பால் பழத்துடன் விரதம் முடிப்போம். இல்லை நாள் முழுதும் உண்ணா விரதம் எடுப்போம்.

விரதம் என்பது ஒவ்வொருத்தரின் மனநிலையைப் பொறுத்தது. ஏன் உடல் நிலையை பொறுத்ததுனுக் கூடச் சொல்லமாம்.


நான் தற்சமயம் கோவையில் இருக்கேன். இங்க உள்ளவர்கள் ஏகாதசியான இன்று மூன்று வேளையும் கோதுமை உணவே உண்கிறார்கள்.

வெங்காயம், பூண்டு சேர்க்காமல் கிழங்கு வகைகளைக் கொண்டு புலுக்கு என்று ஒருவகை கூட்டு வைத்து சாப்பிடுறாங்க.

காலை உணவு சாப்பாத்தி, புலுக்கு கூட்டு. மதியம் கோதுமை கஞ்சி, இரவு விருப்பத்திற்கு ஏற்ப சப்பாத்தியோ, கோதுமை தோசை அல்லது பால் மட்டும்.

இன்னைக்கி விரதம் எடுக்கிறவங்க கண்டிப்பா வரும் சனிக்கிழமையும் விரதம் இருக்கனுமாம். மறுநாள் காலை எப்போதும் போல் சமையல் செய்து அதோடு அகத்திக்கீரை, நெல்லிக்காய் சேர்த்துக்கிறாங்க.

நாம இட்லி ,தோசை சாப்பிட்டா இவுங்க கோதுமையில் உணவா சாப்பிடுவது எனக்கு புது அனுபவமே.

கோதுமை ரவையோடு பாசிபயறு சேர்த்து கஞ்சி. புலுக்கு கூட்டு எப்படி செய்றாங்க தெரியுமா

மரவள்ளி கிழங்கு, வாழைக்காய், பூசணிக்காய் இதோடு காரமணி சேர்த்து நல்லா குழைய வேக வைத்து உப்பு, தேங்காய் சீரகம் அரைத்து போட்டு கிளறி கறிவேப்பிலை உறுவிப் போட்ட வேண்டியது தான். தாளிக்க வேண்டிய வேலையே இல்லை. படு ருசியா கூட்டு. அப்படியே சாப்பிடலாம்

1 comment:

  1. என்னது ''புலுக்கு'' கூட்டா ....எதோ கெட்டவார்த்தை மாதிரி தெரியுது ... இத கண்டுபிடிச்சவன் கோவத்துல இருக்கும்போது பேரு வச்சிட்டானோ?
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete